தொகுப்பாளர் அர்ச்சனாவின் அந்த கேள்வியால், கண்ணீர் விட்டு அழுது சைந்தவி!!

G V Prakash Kumar Super Singer Tamil Singers Saindhavi
By Dhiviyarajan Jun 25, 2024 02:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சில மாதங்களுக்கு முன்பு ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என்றும் தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தனர். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது சைந்தவி சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா கேட்ட ஒரு கேள்வியால் சைந்தவி கண்ணீர்விட்டு அழுது இருக்கிறார்.

கடந்த எபிசோடில் டெடிகேஷன் ரவுண்டு நடந்துள்ளது, அதில் போட்டியாளர் ஸ்வேதா தன்னுடைய அப்பாவுக்காக ஆனந்த யாழை என்ற பாடலை டெடிகேட் செய்துள்ளார்.

அப்போது அர்ச்சனா, சைந்தவியிடம் உங்களது அப்பா உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? என்று கேள்வி கேட்டார். அதற்கு சைந்தவி, நான் இன்று இவ்வளவு வளர்ந்து இருப்பதற்கு இப்படி இருப்பதற்கு முக்கிய காரணமே என்னுடைய அப்பா தான் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். உடனே நிகழ்ச்சியில் தனது அப்பாவை பார்த்ததும் சைந்தவி அவரை கட்டிப்பிடித்து அழுது இருக்கிறார். 

தொகுப்பாளர் அர்ச்சனாவின் அந்த கேள்வியால், கண்ணீர் விட்டு அழுது சைந்தவி!! | Saindhavi Get Emotional In Saregamapa