முதல் மனைவியின் சந்தேகம்!! விவாகரத்து செய்து 2-ஆம் திருமணம் செய்ய இதான் காரணம்!! நடிகர் கார்த்தி..
சின்னத்திரை சீரியல் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஸ்வின் கார்த்தி தற்போது வானத்தைப்போ சீரியலில் ராஜ பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பல சீரியல்களில் நடித்து வரும் அஸ்வின் கார்த்தி ஏற்கனவே திருமணம் செய்தவரை விவாகரத்து செய்து கடந்த ஆண்டு நீண்ட நாள் தோழியும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் கல்யாணம் பண்ண என்ன காரணம் என்று கூறியிருக்கிறார் கார்த்தி. எனக்கும் அவளுக்கு 9 வயது வித்தியாசம் என்பதால் நோ சொல்லிவிட்டேன். நான் ஓகே சொல்லிவிட்டு கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். போகப்போக தான் பாசம் அதிகமாகி காதலாக மாறிவிட்டது.
என்னுடைய தனிப்பட்ட விசயம் வெளியில் வரவில்லை, வந்தால் அதை சமாளித்து இருப்பேன். என் முன்னால் காதலாக இருக்கட்டும் இதற்கு முன் இருந்த பிரச்சனை வாழ்க்கையில் பொசசிவ்நஸ் தான் கிரீடமாக இருந்தது. நாம் என்ன செய்தாலும் அதை நம்ப மாட்டார்கள், சந்தேகத்தோடு தான் இருப்பார்.
ஆனால் இவர் (காயத்ரி) இல்லை. எல்லாத்தையும் புரிய வைத்தேன். இதற்கு முன் இருந்த வாழ்க்கையால் நிறைய பிரச்சனையை சந்தித்தேன், வேலையை விட்டுவிடலாம் என்ற நிலை தோன்றியது. அதன்பின் தான் காயத்ரி என் வாழ்க்கையில் வந்ததாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.