திருமணமாகி ஒரு மாசம் கூட ஆகல! ஷபானா-ஆர்யன் தம்பதிக்கு என்ன ஆனது?

serial sembaruthi shabana aryan baakyalakshmi tamilactress
By Edward Dec 15, 2021 05:00 PM GMT
Report
134 Shares

சின்னத்திரை பிரபலங்கள் தன்னுட பணியாற்றும் சக நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது தற்போது அதிகரித்து விட்டது. அந்த வரிசையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஷபானா - ஆர்யன் ஜோடி.

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவும், பாக்யலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனும் சில மாதங்களுக்கு முன் காதலிப்பதை அறிவித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். திடீரென குடும்பத்தினரை எதிர்த்து கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

சீரியல் நடிகை ரேஷ்மா தான் உடன் இருந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். பாண்டிச்சேரிக்கு ஹனிமூனிற்காக சென்ற தம்பதியினர் ஒரே நாட்களில் சென்னை திரும்பியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஆர்யன் வீட்டினரை எதிர்த்து திருமணம் செய்ததால் தங்களை இன்னும் ஏற்றுக்கொள்ளாததால் ஆர்யன் கோபத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில், திருமணத்தை செய்து வைத்த நடிகை ரேஷ்மா வீட்டிற்கு ஆர்யன் குடும்பத்தினர் சென்று சண்டை போட்டு வந்ததாகவும் செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஷபானாவிடம் ஆர்யன் வீட்டுத்தரப்பில் நீயா என் பையனை விட்டு விலகிடு நாங்க அவனுக்கு வேறொரு பொண்ண பார்த்திருக்கோம் என்று அவர்கள் பேசினதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. 


You may like this...