பாடகி ஜானகி இறப்பிலும் மோசமான ட்ரோல்!! பேத்தி அப்சரா பதிலடி...
பாடகி ஜானகி
பாரதிராஜா, பாக்யராஜ் இறந்த சில வாரங்களில் பிரபல பாடகி ஜானகி அம்மாவும் காலமானது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. வயது மூப்பால் இறந்த ஜானகியின் இறுதிச்சடங்கு மைசூரில் நடந்த நிலையில், பேத்தி அப்சரா இறுதி சடங்குகளை முன்னின்று செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் தன் பாட்டி பற்றி பேசியிருந்தார்.

ஆனால் அந்த வீடியோக்களை பார்த்த சிலர் பாட்டி இறந்திருக்கிறார், பேத்தியின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கூட இல்லை என்று சோசியல் மீடியாக்களில் கேள்வி எழுப்பினர்.
பேத்தி அப்சரா
இதை கேள்விப்பட்ட அப்சரா, நீங்கள் பார்த்த, பார்க்காத கண்ணீரை வைத்து என் பாட்டி மீது நான் வைத்திருக்கும் அன்பை அளவிடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

தன் வாழ்க்கையில் நடந்த சோகமான கதைகளையும் சொல்லி இருக்கிறார். என் அக்கா 2023 ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். அக்கா மீது ஜானகி பாட்டி அளவு கடந்த பாசம் வைத்தார்.
இருவரும் ஒரே மாதிரியானவர்கள், அவர்களுக்கிடையே தனியான புரிதல் இருந்தது என்று கூறியிருக்கிறார் அப்சரா.