கதை திருட்டில் ஈடுபட்ட விஜய் அப்பா எஸ் ஏ சி!! வெளிச்சப்போட்டு காட்டிய பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி பின் நடிப்பில் கவனம் செலுத்தி பிரபலமானவர் நடிகர் சூப்பர்குட் சுப்ரமணி. சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தான் இயக்குனர் ஆவதற்கு ஏற்பட்ட சிக்கல்களை பகிர்ந்துள்ளார். ஊரிலிருந்து கதையுடன் தான் சென்னைக்கு வந்தேன். சினிமாவில் இருக்கும் பாதி நடிகர்களிடம் என் கதையை கூறி இருக்கிறேன்.
சிரஞ்சீவி சார், கதையை கேட்டுவிட்டு அதை என்னிடம் கொடுங்கள் என்று கேட்டதால் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அந்த கதையை எஸ் ஏ சந்திரசேகர், விஜய்-காக கேட்டு வைத்தார். ஆனால், 6 மாதம் கழித்து அதே கதை தெலுங்கில் வேறு படமாக வந்துவிட்டதாக என்னிடம் எஸ் எஸ் சக்ரவர்த்தி கூறினார். நிறைய கதைகள் இப்படி போனது.
விஜய்யிடமும் ஆம்பிலன்ஸ் கதையை கூறியிருக்கிறேன். அப்பாய்ட்மெண்ட் கேட்டு பேசிய சில நாட்கள் கழித்து விஜய் எனக்கு கால் செய்தால். போனில் பேசியவர், நான் தான் விஜய் என்று கூறி ஞாயிற்று கிழமை வீட்டிற்கு வர சொல்லியதால் அங்கு சென்று கதையை கூறினேன்.
அப்போது எனக்கு குழந்தை இருப்பதால் என்னால் பண்ண முடியாது என்ற காரணத்தை கூறினேன். அஜித் இந்த கதையை கேட்டு இரண்டு நிறுவனத்திடம் அனுப்பி வைத்தார். விஜயகாந்த் சாரிடமும் கதையை கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதே ஆம்புலன்ஸ் கதை அடுத்த வருடம் இன்னொரு படமாக வெளியானது. பெரிய நடிகரின் அப்பா தான் அந்த கதையை இயக்கி வெளியிட்டிருக்கிறார். படம் வெளியாகி என் கதையை போல் இருக்கிறது என்று எஸ் ஏ சி-யிடம் சிலர் கூறியிருக்கிறார்கள்.
இதை கேட்டு எஸ் ஏ சி என்னிடம், உன் கதையை நான் பண்ணதாக கூறுகிறார்கள். உன் கதையை சொல்லு என்று கேட்டார். அதற்கு நான் உங்களுக்கே இந்த கதை சொல்லி இருக்கேன் சார், படமா வந்துருச்சி. இப்படி பெரியவர்களை நம்பி ஏமாந்துவிட்டதாக என்று பேட்டியில் தெரிவித்துள்ளார் சுப்ரமணி.
அவரின் கதை தான் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி 2006ல் வெளியான படம் ’நெஞ்சிருக்கும் வரை’ படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.