உங்க இரண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் நைட் எப்போனு கேட்பாங்க கஷ்டமாக இருக்கும்.. தனுஷ் பட நடிகை ஓபன் டாக்
வித்யா பிரதீப்
சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வித்யா பிரதீப்.
இவர் அருண் விஜய்யின் தடம், தனுஷின் மாரி 2, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஓபன் டாக்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற உங்கள் வாழ்க்கையில் நடந்த தர்ம சங்கடமா ஏதும் நடந்திருக்கிறது என்று கேள்வி கேட்டனர்.
பதில் அளித்த வித்யா பிரதீப், நான் நாயகி சீரியலில் நடித்து வந்த போது சிலர் என்னிடம் சீரியலில் உங்களுக்கும் ஹீரோவுக்கும் எப்போ திருமணம் என்று கேட்டு வருவார்கள்.
ஒரு கட்டத்தில் சீரியலில் திருமணம் முடிந்த பிறகு சாந்தி முகூர்த்தம் தள்ளி போகும், அதனால் ரசிகர்கள் என்னிடம், எப்போது உங்களுக்கு உங்களுக்கு பர்ஸ்ட் நைட் என்று கேள்வி கேட்பார்கள். பொது இடங்களில் இது போன்ற கேள்வி கேட்பதால் கஷ்டமாக இருக்கும் என்று நடிகை வித்யா பிரதீப் கூறியுள்ளார்.